மைசூரில் தமிழக, கர்நாடக விவசாயிகள் சந்திப்பு
மைசூர்:
தமிழக மற்றும் கர்நாடக மாநில காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் காவிரிக் குடும்பம் என்ற குடையின் கீழ் இன்று கூடிபல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்து வருகிறார்கள்.
இந் நிலையில் 7வது முறையாக மைசூரில் இன்று காவிரிக் குடும்ப சந்திப்பு தொடங்கியது. இதில் தமிழக விவசாயிகள்ரங்கநாதன் தலைமையிலும், கர்நாடக விவசாயிகள் பசவராஜு தலைமையிலும் கூடி விவாதித்து வருகிறார்கள்.
பற்றாக்குறை காலத்தில் காவிரி நீரை எப்படிப் பங்கிட்டுக் கொள்வது, காவிரி இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்துவது, இருமாநில விவசாயிகளுக்கிடையே நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக இவர்கள் விவாதித்து வருகிறார்கள்.
நாளை இரு மாநில விவசாயிகளும் சேர்ந்து கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளை நேரில் பார்வையிடவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக விவசாயிகள், கர்நாடகத்தில் தற்போது நல்ல மழை பெய்து, அணைகள் நிரம்பி வருவதால்தமிழகத்திற்குக் கூடுதல் நீரைத் திறந்து விட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications