விஜயகாந்த்துக்கு டாக்டர் கிருஷ்ணசாமி சவால்!
சென்னை:
ஜாதி வேண்டாம், அவற்றை ஒழிக்க வேண்டும் என்று கூறும் நடிகர் விஜயகாந்த், தனது ரசிகர்களுக்கு கலப்பு திருமணம் செய்துவைக்க முன்வருவாரா என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டுள்ளார்.
ஆனால் முதலில் அவர் முன் மாதிரியாகத் திகழ வேண்டும். விஜயகாந்தின் மனைவி அவரது ஜாதியைச் சேர்ந்தவர் தான்.அடிப்படையே முரண்பாடாக உள்ளது. வேறு கட்சிகளில், ஜாதி அமைப்புகளில் இருக்கும் ரசிகர்களை அங்கிருந்துவெளியேறச் சொல்லும் விஜயகாந்த், அவர்களை ஜாதி அமைப்பிலிருந்தும் வெளியேறுமாறு கூறுவாரா?
எனவே பேசும்போது யோசித்துப் பேச வேண்டும். பேச வேண்டும் என்பதற்காக பேசக் கூடாது. மற்ற தலைவர்களுக்கு முன்மாதிரியாக அவர் நடந்து கொள்ள முன் வர வேண்டும். தனது ரசிகர்கள் ஒரு லட்சம் பேருக்கு கலப்புத் திருமணம் செய்துவைக்க அவர் தயாரா?
ஒரே ஜாதியில் திருமணம் செய்யாமல், உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு தாழ்த்தப்பட்ட ஜாதியில் திருமணம் செய்துவைப்பாரா? இதை சவாலாகவே அவர் முன் வைக்கிறேன்.
முதலில் விஜயகாந்த் ஜாதியை ஒழிக்கட்டும். அது ஒழிந்தால் தன்னாலேயே ஊழலும், மத வெறியும் ஒழிந்து விடும் என்றுகூறினார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications