குற்றவியல் சட்டம்: சிவராஜ் பாட்டீலுடன் வழக்கறிஞர்கள் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழக வழக்கறிஞர்கள், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை இன்று டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போதுஅவர் குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்தங்களை வாபஸ் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என்றுஉறுதியளித்தார்.

குற்றவியல் நடைமுறை சட்ட திருத்தங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.மத்திய அரசு இதை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் கோரி வருகிறார்கள்.

இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமையில், வழக்கறிஞர்கள்திங்கள்கிழமை இரவு திடீரென கருணாநிதியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர்.

அவர்களிடம் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், பிரதமரை சந்தித்து பிரச்சினைகளை விளக்குமாறும், அதற்குமுன்பாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுமாறும் கருணாநிதி கோரினார்.

ஆனால் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் முதலில் சந்தித்து விட்டு அதன் பின்னர் முடிவு எடுப்பதாக பிரபாகரன்,கருணாநிதியிடம் தெரிவித்தார்.

இந் நிலையில் பிரபாகரன் தலைமையில் வழக்கறிஞர்கள் முகமது கெளஸ், செல்வம், வேல் முருகன், சரவணன் ஆகியோர் இன்றுகாலை டெல்லி புறப்பட்டு சென்றனர். பின் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை சந்தித்து பேசினர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ரகுபதி, வேங்கடபதி மற்றும் காங்கிரஸ் எம்பி.கார்வேந்தன் ஆகியோரும் உடனிருந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பிரபாகரன் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்த குற்றவியல் நடைமுறைசட்டத்திருத்தங்களில் 40ல் 9 திருத்தங்கள் மக்களுக்கு விரோதமானவை. இதில் 20 திருத்தங்களை திரும்பப் பெறவேண்டும்என்று கூறினோம்.

இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் பாட்டீல், ஏற்கனவே நாடாளுமன்றத்தில் இவை நிறைவேற்றப்பட்ட போதிலும்எங்களது கோரிக்கைளை பரிசீலிப்பதாக கூறினார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+