For Daily Alerts
Just In
சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்து
சிவகாசி:
சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில்இடிபாடுகளுக்கிடையே ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இந் நிலையில் இன்று காலை ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் மீண்டும் விபத்து ஏற்பட்டது. இங்குள்ள பள்ளப்பட்டியில் ஒருதொழிற்சாலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின.இதில் அந்த தொழிற்சாலையின் பல அறைகள் தரைமட்டமாயின.
இடிபாடுகளுக்கிடையே சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
Comments
Story first published: Tuesday, July 12, 2005, 5:30 [IST]