எம்ஜிஆர் பெயரை சொல்லி ஏமாற்ற முடியாது: விஜயகாந்துக்கு திரு. நறுக்!
சென்னை:
நடிகர் விஜயகாந்த், எம்.ஜி.ஆர். பெயரை சொல்வதன் மூலமோ அல்லது அவரது படத்தை பயன்படுத்துவதன் மூலமோமக்களை ஏமாற்ற முடியாது என்று பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த செல்வாக்கு, புகழ் எல்லாமே மக்கள் அவருக்குக் கொடுத்தது. யாருடைய பெயரைச் சொல்லியும்எம்.ஜி.ஆர். புகழ் பெறவில்லை. முதல்வர் பதவியை அவர் கேட்கவில்லை, ஆனால் மக்களாக கொடுத்தார்கள்.
எம்.ஜி.ஆர். அமரராகி விட்டார். எனவே அவரது பெயரை, படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால்அவரது பெயரை சொல்வதன் மூலமோ அல்லது படத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ எம்.ஜி.ஆர். போல ஆகி விடமுடியாது.
இதை விஜயகாந்த்தும் புரிந்து கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆரின் வாரிசாக யாரும் மாறி விட முடியாது. வக்கீல்கள்,டாக்டர்கள் அரசியலில் இருப்பது போல நடிகர்களும் கட்சி ஆரம்பிக்கலாம், அரசியல் நடத்தலாம்.
எனவே சக அரசியல்வாதி என்ற முறையில் விஜயகாந்த்தை நான் வரவேற்பேன். விஜயகாந்த் ஆரம்பிக்கப் போகும்கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்று பாஜகவினர் கூறவில்லை. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவுசெய்வோம்.
மதுரையில் நடந்த சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழா அரசு விழாவே அல்ல. அது கூட்டணிக் கட்சிகளின் விழாவாகத் தான்இருந்தது.
காவிரியைப் பொருத்தவரை, கர்நாடக அரசு உபரி நீரைத் தான் திறந்து விடுகிறது. எனவே இதனை மத்திய அரசிடம் எடுத்துக்கூறி தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகம் திறந்து விட திமுக தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பொறுப்புதிமுகவுக்குத் தான் அதிகம் உள்ளது என்றார் திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications