தாதா வீரமணியின் தங்கை கஞ்சா வழக்கில் கைது
சென்னை:
சென்னையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல தாதா வீரமணியின் தங்கை கிரிஜா, கஞ்சா வைத்திருந்ததாக கைதுசெய்யப்பட்டார்.
இவனது தங்கை கிரிஜா. 30 வயதாகும் இவர், ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வதாக போலீஸாருக்குத்தகவல் வந்தது. இதையடுத்து கிரிஜாவைப் பிடிக்க போலீஸார் வலை விரித்தனர்.
நேரடியாக சென்று பிடிக்க முயற்சித்தால் அது பலன் அளிக்காமல் போய் விடும் என்பதால் மாறு வேடத்தில் செல்ல போலீஸார்முடிவு செய்தனர். அதன்படி ஒரு காவலர், கஞ்சா வியாபாரி போல வேடம் பூண்டு கிரிஜாவின் வீட்டிற்கு சென்றார்.
அங்கு சென்றபோது வீட்டுக்கு வெளியே பூட்டு போடப்பட்டிருந்தது. இருப்பினும் கிரிஜா வீட்டுக்குள் தான் இருந்தார். இதைஅறிந்த போலீஸ்காரர் கதவைத் தட்டினார். உடனே கிரிஜா கதவைத் திறந்தார்.
கஞ்சா வாங்க வந்திருப்பதாக போலீஸ்காரர் கூறியதால், அவரை உள்ளே அனுமதித்தார். கஞ்சாவுக்கு விலை பேசிக்கொண்டிருந்தபோது போலீஸ் படை அங்கு வந்தது. கிரிஜாவின் வீட்டிற்குள் புகுந்து கிரிஜாவை கஞ்சாவும், கையுமாகபிடித்தனர்.
அவரிடமிருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவருடன் இருந்த மாமன் மகன் கரிகாலன்என்பவரும் கைது செய்யப்பட்டார். கிரிஜாவை அரசினர் மகளிர் காப்பகத்தில் போலீஸார் வைத்துள்ளனர். அவரை இன்றுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
இதுவரை எந்த வழக்கிலும் சிக்காமல் இருந்து வந்தார் கிரிஜா. அண்ணன் மறைவுக்குப் பின்னர் அவர் முதல் முறையாகபோலீஸில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிஜா கைது செய்யப்பட்டதால் அயோத்தி குப்பம் பகுதியில் பரபரப்புநிலவுகிறது.












Click it and Unblock the Notifications