For Daily Alerts
Just In
39 தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல்
சென்னை:
சென்னை உள்பட 39 சட்டசபைத் தொகுதிகளுக்கு வருகிற 20ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனதலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அறிவித்துள்ளார்.
ஆனால் சரி பார்ப்புப் பணி இன்னும் முடிவடையாததால், ஜூலை 20ம் தேதிக்கு இது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரைவுப்பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு ஆகஸ்ட் 5ம் தேதி வரை குறைகளை கூற அவகாசம் அளிக்கப்படும்.
இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்படும். மீதமுள்ள 195 தொகுதிகளில், பெயர்களை சேர்த்தல்மற்றும் நீக்குதல் தொடர்பான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. அதன் பின்னர் இறுதி வாக்காளர்பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார் குப்தா.
Story first published: Tuesday, July 12, 2005, 5:30 [IST]