ஆட்டோ கட்டணம்: அரசுக்கு உயர்நீதிமன்றம் சூடு
சென்னை:
ஆட்டோ கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய மறுப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் கால் டாக்சி, ஷேர் ஆட்டோ, வேன் போன்றவை கணிசமான அளவுக்கு அதிகரித்துவிட்டன. ஆனால் அதற்கேற்ற வகையில் ஆட்டோக்கள் மீது அரசு பரிவும், கவனமும் செலுத்தவில்லை.
ஆட்டோ கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்டோ மீட்டரில் ஏதாவது குளறுபடி, பழுது என்றால்அவர்களை சிறையில் தள்ளி நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு கடுமையான சட்டங்கள் உள்ளன.
ஆனால் ஆட்டோ கட்டணத்தை மட்டும் உயர்த்த அரசு தீவிர அக்கறை காட்டுவதில்லை. ஆட்டோ கட்டணத்தை குறைந்தபட்சம் 14 ரூபாயாக உயர்த்த வேண்டும். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர்கள் பலமுறை போக்குவரத்து செயலாளரிடம்மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்குவந்தது.
அப்போது தலைமை நீதிபதி கட்ஜூ கூறுகையில், ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டண உயர்வு தொடர்பாக கொடுக்கும் மனுவைபரிசீலிக்க மாட்டோம் என்றோ ஆட்டோ கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்றோ அரசு கூறுவது சரியில்லை.
மனுதாரர் 2 வாரத்திற்குள் புதிய மனுவை போக்குவரத்து செயலாளரிடம் கொடுக்க வேண்டும். அதை 2 வாரத்திற்குள்பரிசீலித்து போக்குவரத்து செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதால் தான் மீட்டரில் சூடு வைப்பது, வாடிக்கையாளர்களிடம் பேரம் பேசுவது,அதனால் பிரச்சினைகள் ஏற்படுவது போன்றவை நிகழ்கின்றன. இதனால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆட்டோ கட்டணத்தை எப்படி உயர்த்துவது என்று அரசு வழக்கறிஞர் கேட்கிறார். அப்படியானால் எதற்காக இத்தனை முறைபெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினீர்கள்? விலையேற்றத்தை சமாளிக்கவே ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டணத்தைஉயர்த்துமாறு கோருகிறார்கள்.
எனவே இப்பிரச்சினையில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார்.