ஜெ. நகைகள்: எடுத்துச் செல்ல வருகிறார் பெங்களூர் நீதிபதி
சென்னை:
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை நேரில்வந்து சரிபார்த்து பெற்றுச் செல்லுமாறு பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி பச்சாப்பூரேவுக்கு, சென்னைதனிநீதிமன்ற நீதிபதி மதிவாணன் கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தவழக்கில் ஜெயலலிதா வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், பொருட்கள், செருப்புகள், ஒரு சொகுசுப்பேருந்து
ஆகியவற்றை ஒப்படைக்குமாறு கூறி இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை தன்மை நீதிபதி மற்றும்நீதிமன்றப் பதிவாளருக்கு பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி பச்சாப்பூரே கடிதம் அனுப்பியிருந்தார்.
இதற்கு சென்னை தனி நீதிமன்ற நீதிபதி மதிவாணன் பதில் அளித்துள்ளார். அதில், இந்த வழக்கில் பறிமுதல்செய்யப்பட்ட பொருட்களை நீங்களே நேரில் வந்து சரிபார்த்து பெற்றுச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி பச்சாப்பூரே சென்னை செல்ல கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளார்.கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி கொடுக்கும் பட்சத்தில் அவர், பறிமுதல் செய்யப்பட் பொருட்களை பெற்றுக்கொள்ள வருவார் என்று தெரிகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 28 கிலோ எடையுள்ள தங்க, வைர, வெள்ளி நகைகள், 41 குளிர்சாதன பெட்டிகள்,பட்டுப் புடவைகள், சொகுசுப் பேருந்து உள்ளிட்ட 1600 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.