For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வழக்கறிஞர்களுக்கு கட்ஜூ கடும் எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நீதிமன்றப் புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் தொடர்ந்து ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ எச்சரிக்கை விடுத்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்புப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தலைமையிலான டிவிஷன் பெஞ்ச்முன்பு இன்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மட்டும் ஆஜராகியிருந்தனர். ஆனால் எதிர்த் தரப்பு வழக்கறிஞர்கள் வரவில்லை.இதனால் நீதிபதி கட்ஜூ கோபமடைந்தார். வழக்கறிஞர்களுடன் நான் மோதல் போக்கை விரும்பவில்லை.

ஆனால் அவர்கள் நீதிமன்ற அமைப்பையே செயல்பட விடாமல் தடுக்கிறார்கள். இதை அனுமதிக்க முடியாது. தங்களதுபுறக்கணிப்புப் போராட்டத்தை வழக்கறிஞர்கள் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X