தாஜ்மஹால் எங்களுக்கு சொந்தம்: வக்பு வாரியம்
டெல்லி:
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று இன்றுஅறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுபற்றி வக்பு வாரியம் விசாரிக்க உத்தரவிட்டது.
இதன் பேரில் வக்பு வாரிய தலைவர் ஹபீப் உஸ்மான் மும்பை, கொல்கத்தா உட்பட பல பகுதிகளுக்கு சென்றுஆய்வு செய்து தகவல்களை திரட்டினார்.
விரிவான ஆய்வுக்குப் பிறகு தாஜ்மஹால் வக்பு வாரியத்திற்குத் தான் சொந்தம் என்று இன்று அவர் அறிவித்தார்.17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட எழில் மிகுந்த இந்த கட்டிடத்தை உத்திரப்பிரதேச சன்னி பிரிவு வக்புவாரியத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே வக்பு வாரியத்தின் இந்த அறிவிப்பு குறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,வக்பு வாரியத்தின் இந்த அறிவிப்பு தாஜ்மஹாலின் நலனுக்கு நல்லதல்ல.
எனவே இது தொடர்பாக தொல்லியல் துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்றார்.