வழக்கறிஞர்கள் "வாதத்திற்குத் திரும்பினர்!
சென்னை:
குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தங்களை தமிழகத்தில் அமல்படுத்தாமல் இருக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் எனமுதல்வர் ஜெயலலிதா உறுதியளித்ததைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் இன்று காலை முதல் நீதிமன்ற நடவடிக்கைகளில்கலந்து கொண்டனர்.
இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக உயர்நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் விசாரணைபாதிக்கப்பட்டது.
சட்டத் திருத்தங்களை வாபஸ் பெறக் கோரி பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உள்ளிட்டோரைவழக்கறிஞர்கள் சந்தித்து முறையிட்டனர். இந் நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் வழக்கறிஞர்கள் சந்தித்துகோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது, சட்டத் திருத்தங்களை அமல்படுத்தாமல் இருக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என ஜெயலலிதாவழக்கறிஞர்களிடம் உறுதியளித்தார். இதையடுத்து இன்று முதல் பணிக்குத் திரும்ப வழக்கறிஞர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் பணிக்குத் திரும்பினர். ஈரோடு மாவட்டத்தில்மட்டும் நாளை பணிக்குத் திரும்ப வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications