For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி: விவசாயிகள் ரயில், சாலை மறியல்

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் படி, தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு விடுவிக்கக் கோரி காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களில் விவசாயிகள் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று நள்ளிரவு முதல் 48 மணிநேர ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் தொடங்கியது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொண்டன.

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.பழனிச்சாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பேர் கம்பன் எக்ஸ்பிரஸ்ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கது செய்தனர்.

தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் துரை மாணிக்கம் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில்ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுதவிர தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில்ஆயிரக்கணக்கான பேர் ஈடுபட்டனர். கடை மடைப் பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்திலும் போராட்டம் நடந்தது.

இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X