அனைத்துக் கட்சியினருடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை
சென்னை:
போலி வாக்காளர் சேர்ப்பு விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னையில் அரசியல் கட்சிப்பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.
இதுதொடர்பாக சில வாரங்களுக்கு முன்பு துணை தேர்தல் ஆணையர் மிஸ்ரா, சட்ட ஆலோசகர் வென்ரேட்டா ஆகியோரைதேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில் போலி வாக்காளர் பிரச்சினை குறித்து தமிழக தேர்தல்ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந் நிலையில் இரு அதிகாரிகளும் இன்று மீண்டும் சென்னைவந்தனர்.
தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று காலை அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் அவர்கள் ஆலோசனைநடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவும் கலந்து கொண்டார்.
அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், திமுக சார்பில் ஆற்காடு வீராசாமி, டி.கே.எஸ். இளங்கோவன்,பாமக சார்பில் ஜி.கே.மணி, காங்கிரஸ் சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
இன்று பிற்பகல் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 7 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள்ஆலோசனை நடத்துகிறார்கள். நாளை கோவையிலும், சனிக்கிழமை மதுரையிலும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications