போலீஸாரால் உயிருக்கு ஆபத்து: ஜெயலட்சுமி புகார்

Subscribe to Oneindia Tamil

கோவை:

போலீஸ் அதிகாரிகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயலட்சுமி புகார் கூறியுள்ளார்.

கோவை தொழிலதிபர் வரதராஜன் என்பவரிடம் சப் இன்ஸ்பெக்டர் போல நடித்து ரூ.1.80 லட்சம் மோசடி செய்ததாகஜெயலட்சுமி மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான விசாரணைக்காக ஜெயலட்சுமி நேற்று (புதன்கிழமை) கோவைநீதிமன்றத்தில் ஆஜரானார்.

வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 16ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் பிறகு நீதிமன்றத்தை விட்டுவெளியே வந்த ஜெயலட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், சிபிஐ போலீஸார் என் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

என் மீதான வழக்குகளில் போலீஸ் அதிகாரிகள் பலர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்கள் மூலமாக எனக்கு ஆபத்து ஏற்படவாய்ப்புள்ளது. எனவே எனக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும் என்று மதுரை நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்துள்ளேன்.

என் மீது ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் இருந்து நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். பொதுமக்கள் ஆதரவு அளித்தால் தேர்தலில்போட்டியிடுவேன் என்றார் ஜெயலட்சுமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+