குழந்தைகளுக்கு தமிழில் பெயர்: வைரமுத்து விருப்பம்
சென்னை:
தமிழ் குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து விருப்பம் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து தனது 53வது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார். கவிஞர் திருநாளாக இதை அவர்கொண்டாடினார். இதையொட்டி சென்னை டிரஸ்ட்புரத்தில் உள்ள வைரமுத்துவுக்குச் சொந்தமான பொன்மணி மாளிகையில்நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் நீதிபதி கோகுல கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கவிஞர் காசி ஆனந்தன், இன்குலாப் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற காசி ஆனந்தன், இன்குலாப்ஆகியோரை வாழ்த்தி கவிஞர் ஈரோடு தமிழன்பன், நீதிபதி கோகுல கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் வைரமுத்து பேசுகையில், இங்கு வழங்கியது தான் நான் பெறும் முதல் விருது என்று இன்குலாப் கூறியபோதுஎனது கண்களின் ஓரம் கண்ணீர் தேங்கியது. இதுவே எனது கடைசி விருதாகவும் இருக்கலாம் என்று அவர் கூறிய போதுஉடைந்தே போனேன்.
அதே போல, எத்தனையோ சபைகளில் தான் நிராகரிக்கப்பட்டதாக காசி ஆனந்தன் கூறினார். அதற்காக நான்வெட்கப்படுகிறேன், மன்னிப்பு கேட்கிறேன். அவர் எழுதிய கவிதை வேண்டும், அவர் வேண்டாமா? சூடு வேண்டும், நெருப்புவேண்டாமா?
தண்ணீர் வேண்டும், மழை வேண்டாமா? கவிதையும், கவிஞனும் சேர்ந்தே மதிக்கப்பட வேண்டும். நாங்கள் எல்லாம் கொஞ்சம்சமரசம் செய்து கொள்கிறோம். ஆனால் இந்த இரு கவிஞர்களும் கொஞ்சம் கூட கொள்கையிலிருந்து விலகாதவர்கள். சமரசம்செய்து கொள்ளாதவர்கள்.
இந்த நேரத்தில் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். தமிழர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டவேண்டும். அதேபோல திரைப்படங்களுக்கும் தமிழிலேயே பெயர் வைக்கப்பட வேண்டும். இதைத் தமிழன் தான் செய்யமுடியும் என்றார். வைரமுத்து.
முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்து ஆசி பெற்றார் வைரமுத்து. அதேபோல,மெரீனா கடற்கரையில் உள்ள கம்பன், இளங்கோவடிகள், பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர், வீரமாமுனிவர் மற்றும்கண்ணதாசன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாலையில் நடந்த பாராட்டு விழாவில் இயக்குனர் பாரதிராஜா, நடிகர் சிவக்குமார், பின்னணிப் பாடகர்எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசையமைப்பாளர் வித்யாசாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications