For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆதியின் முக்கிய கூட்டாளி கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மோசடி மன்னன் ஆதி கேசவனின் முக்கியக் கூட்டாளி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த நான்கு பேருக்கு, கார்,பஸ், வீடு வாங்கித் தருவதாக கூறி ரூ. 20 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக போலீஸாருக்குப் புகார்கள்வந்தன.

இதையடுத்து சங்கர் கணேஷை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, 20 லட்சம் பணத்தையும்மோசடி மன்னன் ஆதி கேசவனிடம் கொடுத்து விட்டதாக சங்கர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஆதியின் முக்கியக் கூட்டாளிகளில் ஒருவராக சங்கர் கணேஷ் செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்தது. சங்கர் கணேஷைக் கைது செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X