விநாயகமூர்த்தி மீது தாக்குதல்: 4 காங். தொண்டர்கள் நீக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதாவைப் புகழ்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏவுமான விநாயகமூர்த்தி, சத்தியமூர்த்தி பவனில் வைத்துதாக்கப்பட்டது தொடர்பாக 4 பேரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசியதால், காங்கிரஸ் கட்சியினரின் கடும் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டுள்ளார்விநாயகமூர்த்தி. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் கோரி வருகிறார்கள்.

இந் நிலையில் வியாழக்கிழமை சத்தியமூர்த்தி பவனுக்கு விநாயகமூர்த்தி வந்தபோது அவரை வாசன் ஆதரவாளர்கள்முற்றுகையிட்டு கோஷமிட்டனர். பின்னர் அவர்களில் சிலர் விநாயகமூர்த்தியை சரமாரியாக அடித்தனர். முதுகில் குத்திகீழே தள்ளினர்.

வாசன் கோஷ்டியைச் சேராத தொண்டர்கள் விரைந்து வந்து விநாயகமூர்த்தியை அங்கிருந்து மீட்டு பத்திரமாக அழைத்துச்சென்றனர். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே, மூத்த தலைவர் ஒருவரை தொண்டர்கள் தாக்கியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து விநாயகமூர்த்தி கூறுகையில், காங்கிரஸ் கட்சியை வளர்த்ததில் எனக்கு முக்கியப்பங்கு இருக்கிறது.நான் வளர்த்த கட்சியில் உழைத்த உழைப்பை எந்தக் காலத்திலும் தவறாகப் பயன்படுத்த மாட்டேன்.

கட்சியில் விளக்கம் கேட்கும் சூழ்நிலையில் இல்லை. கட்சிக்கோ, கூட்டணித் தலைவர்களுக்கு புறம்பாகவோ நான் கருத்துஏதும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார் விநாயகமூர்த்தி.

4 பேர் நீக்கம்:

இதற்கிடையே விநாயகமூர்த்தியைத் தாக்கிய வட சென்னை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கராத்தே சந்துரு, விஜயன், மாரி,ரமேஷ் ஆகியோரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி கட்சித் லைவர் ஜி.கே.வாசன் உத்தரவிட்டுள்ளார்.

இளங்கோவன் கண்டனம்:

விநாயகமூர்த்தி தாக்கப்பட்டதற்கு மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம்தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், பெருந்தலைவர் காமராஜரால், சிறந்த மாவட்ட தலைவர் என்றுபாராட்டப்பட்டவர் விநாயகமூர்த்தி.

70 வயதைத் தாண்டிய முதுபெரும் தலைவரான அவரை சத்தியமூர்த்தி பவனிலேயே தாக்கியது கடும் கண்டனத்துக்குரியது,மிகவும் வேதனைக்குரிய செயலாகும். தரம் தாழ்ந்த இந்த செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும்.

இதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றவேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான் காங்கிரஸ் கட்சியின் கெளரவமும், தீரர் சத்தியமூர்த்தியின் பெயரால்இயங்கி வரும் காங்கிரஸ் தலைமையகத்தின் மரியாதையும், காமராஜர் பணியாற்றிய இடத்தின் கண்ணியமும் காக்கப்படும் எனநம்புகிறேன் என்று கூறியுள்ளார் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+