இலங்கை கடற்படை சுட்டு விடுதலைப் புலி சாவு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் திரிகோணமலை பகுதியில் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைசேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

வடக்கு திரிகோணமலை பகுதியிலுள்ள கும்புருப்பிடி பகுதியிலுள்ள விபுலானந்தா கிராமத்தை நேற்று(வியாழக்கிழமை) மாலை திடீரென சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் கிராமத்தினரை நோக்கிசரமாரியாக சுட்டனர்.

இதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர்காயமடைந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இலங்கைகடற்படையினர், விபுலானந்தா கிராமத்தை சுற்றி வளைத்து வீடு வீடாக சோதனை நடத்தினர்.

இச் சம்பவத்திற்குப் பிறகு இக்கிராமத்தை சேர்ந்த முத்தையா ராசா (வயது 20), தங்கராஜா கீர்த்தீஸ்வரன் (வயது25) ஆகிய பேரை காணவில்லை என்று இக் கிராமத்தினர் கூறுகின்றனர். இவர்களை இலங்கை கடற்படையினர்பிடித்துச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+