வைகை எக்ஸ்பிரஸை வலுக்கட்டாயமாக நிறுத்திய பாமக பிரமுகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாமக பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, திண்டிவனம் ரயில் நிலையத்தில், வைகை எக்ஸ்பிரஸ்ரயிலை வலுக்கட்டாயமாத நிறுத்திய (இங்கு வழக்கமாக நிற்காது) பாமக பிரமுகர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெரம்பூர் ரயில்வே பணிமனையில் டெக்னீஷியனாக பணியாற்றும் கோட்டீஸ்வரன் என்பவர் இதுதொடர்பாகஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில்,

பெரம்பூர் ரயில்வே பணிமனையில் வேலை பார்த்து வரும் ஞானசேகரன் பாமகவைச் சேர்ந்த நிர்வாகியாவார்.கடந்த ஜூன் மாதம் பாமக பொதுக்குழுக் கூட்டம் திண்டிவனம் மாவட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாசின்தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஞானசேகரன் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையில் இருந்துசென்றார். திண்டிவனம் ரயில் நிலையத்தில் வழக்கமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நிற்காது.

ஆனால், ஞானசேகரன் தான் பாமகவைச் சேர்ந்த பிரமுகர் என்று கூறி ரயிலை திண்டிவனத்தில் வலுக்கட்டாயமாகநிறுத்தி இறங்கியுள்ளார்.

அன்று தைலாபுரத்தில் நடந்த பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் ஞானசேகரன் பாமக தொழிலாளர் பிரிவு பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஞானசேகரனின் செயல் சட்டவிரோதமானது.

ரயில்வேத்துறை இணை அமைச்சராக பாமகவைச் சேர்ந்த ஆர்.வேலு இருப்பதால் அந்த செல்வாக்கைப்பயன்படுத்தி முறைகேடாக ரயிலை நிறுத்தியுள்ளார் ஞானசேகரன்.

எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் கோட்டீஸ்வரன்.

ரயிலை அப்படியே ராமதாஸின் தோட்டத்துக்கே ஓட்டச் சொல்லாமல் விட்டாரே ஞானசேகரன்...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+