கோவில் விழாவில் பலியிடப்பட்ட 32 எருமைகள்!
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சக்கம்பட்டி செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவில் 32எருமைகள் பலி கொடுக்கப்பட்டன.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல மொத்தமாக எருமைகள் பலியிடப்பட்டன. இந்த ஆண்டு விழாவில்எருமைகள் பலி கொடுக்கும் நிகழ்ச்சியும் இடம் பெற்றது.
இதற்காக 32 எருமைகள் கொண்டு வரப்பட்டு பலி கொடுக்கப்பட்டன. பின்னர் கடந்த முறை 70 எருமைகள் பலிகொடுக்கப்பட்டு மொத்தமாக புதைக்கப்பட்ட இடத்தை பக்தர்கள் தோண்டினர்.
அந்தக் குழிக்குள் இருந்த எலும்புக் கூடுகளை எடுத்து வெளியே போட்டு விட்டு, தற்போது பலி கொடுக்கப்பட்ட32 எருமைகளையும் போட்டு மூடினர்.
32 எருமைகளும் பலியிடப்பட்ட இடம் ஒரே ரத்தக் களறியாகக் காட்சியளித்தது. நடு ரோட்டில் வெட்டப்பட்டுஅந்தப் பகுதியே நாறியது.
மேலும் தலை வேறு, உடல் வேறாக 32 எருமைகள் கிடந்தது பலருக்கும் கிலியை ஏற்படுத்தியது.
இந்த எருமை பலியிடும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.