குளித்தலை ஆசிரியை: உயர்நீதிமன்றம் இறுதி கெடு
மதுரை:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் போலீஸார்விசாரணையை முடிக்காவிட்டால் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பது குறித்து தீவிரமாகபரிசீலிக்கப்படும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை அறிவித்துள்ளது.
மீனாட்சி காணாமல் போனது தொடர்பாக அவரது கணவர் தொடர்ந்துள்ள ஹேபியஸ் கார்பஸ் மனுவைவிசாரித்து வரும் உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணையை முடிக்க பல முறை போலீஸுக்கு கெடுவிதித்தும் இன்னும் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை கிளையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மனோவசிய முறையில், மீனாட்சி வழக்கில் அவரது கணவர் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணைநடத்தியதற்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
அப்போது இந்த விசாரணையில் துப்பு துலங்காமல் இருப்பதால் கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்குமாறும்,ஆகஸ்ட் மாத இறுதி வரையில் கெடுவை நீட்டித்தால் நல்லது என்றும் போலீஸ் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கை குறித்து இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் சிவசுப்ரமணியன் மற்றும் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் ஆகியோர் அறிவித்திருந்தனர். இந் நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது,ஆகஸ்ட் 22ம் தேதி வரை போலீஸாருக்கு அவகாசம் கொடுக்கப்படுகிறது.
அதற்குள் விசாரணையை முடித்து விட வேண்டும். தவறும் பட்சத்தில், இந்த வழக்கை சிபிஐயிடம்ஒப்படைப்பது குறித்து நீதிமன்றம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டி வரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications