ஜெ. சொத்துக்கள்: 3 நீதிபதிகள் சென்னை வருகின்றனர்
பெங்களூர்:
சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் நகை மற்றும் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக பெங்களூரில் இருந்து 3 நீதிபதிகள் சென்னை வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு சென்னை தனிநீதிமன்றம் கூறியது. இதைத்தொடர்ந்து பொருட்களை எடுத்து வர அனுமதி கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதற்கு முறையான அனுமதி கிடைத்தவுடன் சென்னை வந்து பொருட்கள் பெற்றுக் கொள்ளப்படும். சென்னை வரும் குழுவில்சிறப்பு நீதிமன்ற நீதிபதி பச்சாப்பூரே மற்றும் கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் அந்துஸ்துள்ள 2 நீதிபதிகள்இடம்பெறுவர்.
இவர்களுடன் 8 நீதிமன்ற ஊழியர்களும் சென்னை வருவார்கள். பொருட்களை எடுத்து வர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடியவேன் தயாராக இருக்கிறது. பாதுகாப்புக்காக 50க்கும் மேற்பட்ட கர்நாடகப் போலீஸாரும் உடன் வருவார்கள்.
குற்றச்சாட்டுப் பதிவு:
இதற்கிடையே இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பான வாதம் வரும் 22ம் தேதி முதல் தொடங்கும் எனநீதிபதி பச்சேபுரே இன்று அறிவித்தார்.
இந்த வழக்கில் 5வது குற்றவாளியான அதிமுக எம்பி தினகரன், தனக்கு ஆவணங்களைப் படிக்க கூடுதல் அவகாசம் வேண்டும்என்று தனது வழக்கறிஞர் மூலம் வைத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார்.












Click it and Unblock the Notifications