For Daily Alerts
Just In
விவசாயிகள் மீது போலீஸ் தாக்குதல்: கருணாநிதி கண்டனம்
சென்னை :
காவிரி நீரை கர்நாடக அரசு விடுவிக்கக் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள்,கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது கடும்கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
விவசாயிகளையும், கம்யூனிஸ்ட் கட்சியினரையும் கைது செய்வதாகக் கூறி காட்டுமிராண்டித்தனமாகதாக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை வேனில் ஏற்ற முற்பட்டபோது, மாவட்ட கம்யூனிஸ்ட் செயலாளர்செல்வராஜுக்கு ரத்தக் காயம் ஏற்படும் அளவுக்கு மூர்க்கமாகத் தாக்கியுள்ளனர்.
அமைதியான போராட்டத்தைக் குலைக்க இம்மாதிரியான போக்கை கையாளும் காவல்துறைக்கும், அந்தத்துறைக்கு பொறுப்பான முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்று கூறியுள்ளார் கருணாநிதி.
Comments
Story first published: Saturday, July 16, 2005, 5:30 [IST]