மத்திய அமைச்சரவை மாற்றம் தள்ளிவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்திய அமைச்சரவை மாற்றம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிந்த பின்னரேஅமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பல மாதங்களாக இன்று, நாளை என மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பது குறித்து தகவல்கள் வெளியான வண்ணம்இருந்தது. பிரதமர் மன்மோகன் சிங் இன்று அமெரிக்கா செல்வதால் நேற்று கண்டிப்பாக அமைச்சரவை மாற்றம் இருக்கும்என்று கூறப்பட்டது.

ஆனால் அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் மன்மோகன் சிங் தள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக அரசுத் துறைவட்டாரங்கள் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா செல்வதால், அதுதொடர்பான சர்வதேச விவகாரங்கள்மற்றும் அரசியல் பிரச்னைகளில் அவர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

எனவே அமைச்சரவை மாற்றத்தில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. வரும் 25ம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்காலகூட்டத்தொடர் துவங்குகிறது. அதற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் செய்ய சோனியாவும் பிரதமரும் விரும்பினர்.

ஆனால், பெல் பங்குகள் விற்பனை விவகாரத்தில் இடதுசாரி கட்சிகளுடன் ஏற்பட்ட முரண்பாடு, அயோத்தி தாக்குதல் போன்றபிரச்னைகளால் அமைச்சரவை மாற்றம் பின்னுக்குத் தள்ளப்பட் டு விட்டது.

அமெரிக்கப் பயணத்தை முடித்து வரும் 22ம் தேதி பிரதமர் நாடு திரும்புகிறார். வந்தவுடன் நாடாளுமன்றத்தின் மழைக்காலகூட்டத்தொடருக்கான பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்கும்போது அமைச்சரவையில்மாற்றம் செய்வது சரியாக இருக்காது.

எனவே, மழைக்கால கூட்டத்தொடர் முடிந்த பின்னரே அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+