ஊட்டி ரயில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு!
சென்னை:
ஊட்டி மலை ரயில், உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில், அதாவது 1899ம் ஆண்டு மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. அதன்பின்னர் 1908ம் ஆண்டு ஊட்டி வரை இந்த ரயில் பாதை நீட்டிக்கப்பட்டது. அந்த ஆண்டு முதல் மலை ரயில் போக்குவரத்துதொய்வின்றி தொடங்கி நடந்து வருகிறது.
உலகிலேயே இதுபோல ரயில்சேவை ஓரிரு இடங்களில் தான் உள்ளன. பாரம்பரியமிக்க இந்த ரயில் போக்குவரத்தை உலகபாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவிப்பதற்கான முயற்சிகளில் தென்னக ரயில்வே, டெல்லியில் உள்ள ரயில்வேஅருங்காட்சியகம் மற்றும் ரயில்வே வாரியம் ஆகியவை இறங்கின.
யுனெஸ்கோவுக்கு ஊட்டி மலை ரயில் குறித்த விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டுசெப்டம்பர் மாதம் சிட்னியைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் லீ என்பவரது தலைமையிலான யுனெஸ்கோ குழு ஊட்டிக்கு வந்துமலை ரயில் போக்குவரத்தை ஆய்வு செய்தது.
மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையில் உள்ள ரயில் பாதை, ரயில் நிலைய கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்டவற்றைஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து ஊட்டி மலை ரயிலுக்கு உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை வழங்கலாம் என்றுயுனெஸ்கோவுக்கு லீ தலைமையிலான குழு பரிந்துரை செய்தது.
இந்தப் பரிந்துரையை ஏற்ற யுனெஸ்கோ அமைப்பு, நீலகிரி மலை ரயிலை உலக பாரம்பரியச் சின்னமாக தற்போதுஅறிவித்துள்ளது. உலகின் மிகச் சிறந்த ரயில் போக்குவரத்தாக நீலகிரி மலை ரயில் உள்ளது.
பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் தனித்துவத்துடன் நீலகிரி மலை ரயில் விளங்குகிறது. ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள்,ரயில் நிலையங்கள் என அனைத்துமே மிக சிறப்பாகவும், தனித்துவத்துடனும் உள்ளன.
எனவே இந்த ரயிலுக்கு உலக பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்தைத் தருவது மிகப் பொருத்தமானது என்று யுனெஸ்கோஅமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஊட்டி மலை ரயிலைப் போலவே இயங்கி வரும் டார்ஜீலிங் மலை ரயிலும் உலக பாரம்பரியச் சின்னம் என்றஅந்தஸ்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகப் பாரம்பரியச் சின்னமாக ஊட்டி மலை ரயில் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின்எண்ணிக்கை மேலும் அதிகரித்து இப்பிரதேசம் பொருளாதார ரீதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.