சேது திட்டம்: காங்கிரஸ்காரனே காரணம்- இளங்கோவன்
திருச்சி:
சேது சமுத்திரத் திட்டம் அமலாக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். வேறு கட்சிகள் இதற்கு உரிமை கொண்டாடமுடியாது என்று மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தடாலடியாக கூறியுள்ளார்.
இதில் இளங்கோவன் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டம் எங்களால்தான் வந்தது என்று இன்று பலரும் உரிமை கொண்டாடிவருகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் அதற்குத் தகுதியற்றவர்கள். உண்மையில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு உரிமைகொண்டாடக் கூடிய முழுத் தகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு.
ஒரு திட்டத்தை யார் முன் வைத்தார்கள், யார் கொண்டு வந்தார்கள், யார் பரிந்துரைத்தார்கள் என்பது முக்கியமல்ல. அதை யார்நிறைவேற்றினார்கள் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் பார்த்தால், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியது யார் என்றுபார்த்தால் அது காங்கிரஸ் கட்சிதான்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்னை சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும்தான் அந்த பெருமைக்குஉரியவர்கள். எனவே காங்கிரஸ்காரன் மட்டுமே இந்தத் திட்டத்திற்கு உரிமை கொண்டாட முடியும். மற்றவர்களுக்கு அந்தத்தகுதி இல்லை என்றார் இளங்கோவன்.
இளங்கோவனின் இந்தப் பேச்சு திமுக, மதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications