சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் இல்லை: நரேஷ் குப்தா
மதுரை:
தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நிரேஷ் குப்தாகூறியுள்ளார்.
இவர்கள் தவிர நரேஷ் குப்தா, 14 மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மதுரை, திருச்சி, நெல்லை மாநகராட்சி ஆணையர்கள்உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
முதலில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர்மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் நரேஷ் குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்திற்கு முன் கூட்டியே தேர்தல்நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. கேரளா, அஸ்ஸாம், புதுவை மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்குநடத்தப்படும்போது தமிழகத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படும்.
தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்த நாங்கள்தயாராகவே இருக்கிறோம் என்றார் நரேஷ் குப்தா.
மிஸ்ரா கூறுகையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் முழுமையாக திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. குறைகள் இல்லாமல்பார்த்துக் கொள்ளப்படும். இதுவரை 30 மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி ஆய்வு செய்யப்பட்டுள்ளது.தற்போது மதுரையில் 14 மாவட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 31ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலும், திருத்ததப்பட்ட பட்டியல் செப்டம்பர் 15ம் தேதியும் திட்டமிட்டபடிவெளியாகும்.
போலி வாக்காளர் விண்ணப்பங்களை அளித்தவர்கள் மீது (இதில் பெரும்பாலானவர்கள் அதிமுகவினர்) சட்டப்படியானநடவடிக்கை எடுக்கப்படும். என்ன மாதியான நடவடிக்கை என்பதை இப்போதே கூற முடியாது என்றார் மிஸ்ரா.