லண்டன் குண்டுவெடிப்பு: தீவிரவாதி குஜராத் பெண்ணை மணந்தவர்?
சூரத்:
லண்டனில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளில் ஒருவர் குஜராத்தைச் சேர்ந்த பெண்ணைத்திருமணம் செய்தவர் என்று கூறப்படுகிறது.
இந்தத் திருமணத்துக்குப் பின் பரிதா படேலும் தனது மகள்-மருமகனுடன் இங்கிலாந்திலேயே குடியேறிவிட்டதாகக்கூறப்படுகிறது. இப்போது பரிதா இங்கிலாந்தில் இருக்கிறாரா அல்லது குஜராத்தில் வசிக்கிறாரா என்பதில் குழப்பம் நிலவுகிறது.
இதையடுத்து பரிதாவை குஜராத் போலீசார் தேட ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையே லண்டனில் ரயிலிலும் பஸ்சிலும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் நான்கு பேரின் படங்களையும் இங்கிலாந்துபோலீசார் வெளியிட்டுள்ளனர். பஸ் நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் வைக்கப்பட்டுள்ள ரகசிய கேமராக்களில் இந்தநால்வருமே பதிவாகியுள்ளனர்.
இதற்கிடையே லண்டண் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இங்கிலாந்தில் ஆசியர்கள் மீது இன ரீதியிலான தாக்குதல்கள்அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் இந்தத் தாக்குதல்கள் 10 மடங்கு அதிகரித்துவிட்டன.
இங்கிலாந்தில் மசூதிகள் தவிர குருத்வாராக்கள் மீதும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.