ராஜிவ் கொலை: 2 புலிகள் விடுதலையை எதிர்த்து சிபிஐ அப்பீல்- உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
டெல்லி:
ராஜிவ் கொலை வழக்கில் லிங்கம், வசந்தன் ஆகிய விடுதலைப் புலிகளை சென்னை உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்ததைஎதிர்த்து சிபிஐ தாக்கல் செய்துள்ள மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடக்கவுள்ளது.
இந்த வழக்கில் லிங்கம், வசந்தன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 25ம் தேதி விடுதலை செய்தது.
இதை எதிர்த்து சிபிஐ இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,லிங்கமும், வசந்தனும் ராஜிவ் கொலையாளிகளுக்கு பல வகையிலும் உதவிகள் புரிந்துள்ளனர். கொலைக்கு இவர்களதுஉதவியும் முக்கிய காரணமாக இருந்துள்ளது.
எனவே இவர்களது விடுதலைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
தற்போது வசந்தனும் லிங்கமும் செங்கல்பட்டு அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.அனுமதியில்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்ததாக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications