ராஜீவ் வழக்கில் விடுதலையான சுபா சுந்தரம் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, 9 ஆண்டு சிறை வாசத்திற்குப் பின்னர் விடுதலையான புகைப்படக் கலைஞர் சுபாசுந்தரம் சென்னையில் மரணமடைந்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர் சுபா சுந்தரம். புகைப்பட நிபுணரான சுபா சுந்தரம் 9 ஆண்டு காலம் சிறைவாசம்அனுபவித்தார். பின்னர் உச்சநீதிமன்றம் மூலம் இவர் விடுதலை செய்யப்பட்டார்.

திருவான்மியூர் பத்திரிக்கையாளர் குடியிருப்பில் வசித்து வந்த சுபா சுந்தரத்திற்கு சனிக்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டது.சிறிது நேரத்திலேயே அவர் இறந்து விட்டார். இறந்த சுபா சுந்தரத்திற்கு வயது 65.

சுபா சுந்தரத்தின் உடலுக்கு பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கை புகைப்படக்காரர்கள், பல்துறை பிரமுகர்கள் மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+