காவிரி: பிரதமரை சந்திக்கும் திமுக கூட்டணி
சென்னை:
காவிரியிலிருந்து கர்நாடகம் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை வரும் 25ம் தேதி நேரில்சந்தித்து வலியுறுத்த திமுக கூட்டணி முடிவு செய்துள்ளது.
இக் கூட்டத்தில் காவிரிப் பிரச்சினை தொடர்பாக திமுக கூட்டணியினர் பிரதமரைச் சந்தித்து கோரிக்கை விடுப்பது என்று முடிவுசெய்யப்பட்டது.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் வரும் 25ம் தேதி திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள்டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இதற்கிடையே, இன்று முதல் வரும் 30ம் தேதி வரை மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில்கருணாநிதி ஆலோசனை நடத்தவுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவினரை சமாளிப்பது உள்பட உள்கட்சி விவகாரம்,கோஷ்டிப் பூசல்கள் குறித்தும் கருணாநிதி தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.