கேஸ் லாரிகள் ஸ்டிரைக்: சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு
சென்னை:
தமிழகம் முழுவதும் சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் இன்று முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ன. இதனால் மாநிலம் முழுவதும் கேஸ் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று முதல் (18ம் தேதி) காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை கேஸ் லாரி உரிமையாளர்கள்அறிவித்துள்ளனர். தமிழகம் தவிர தென் மாநிலங்கள் முழுவதும் சுமார் 5,000 லாரிகள் இந்த கேஸ் வினியோகத்தில்ஈடுபட்டுள்ளன.
இதில் 4,000 லாரிகள் நாமக்கல்லைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களுக்குச் சொந்தமானவை. தென் மாநிலங்கள் தவிர வடமாநிலங்களிலும் நாமக்கல் அதிபர்களின் லாரிகள் தான் பெரும்பாலும் துறைமுகங்கள், எண்ணெய் நிறுவன கிடங்குகளில்இருந்து சமையல் எரிவாயுவை வினியோகித்து வருகின்றன.
இந் நிலையில் இன்று முதல் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டுவிட்டதால் இந்த டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுவிட்டன. இந்த லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் கேஸ் தான் சமையல் எரிவாயு சிலிண்டெர்களில்நிரப்பப்பட்டு வினியோகிக்கப்படும்.
இப்போது இந்த லாரிகள் நிறுத்தப்பட்டுவிட்டதால், சமையல் எரிவாயுவை சிலிண்டெர்களில் நிரப்பும் பாட்டிங்பிளாண்டுகளுக்கு கேஸ் வருவது தடைபட்டுள்ளது.
இந்தப் போராட்டம் நீடித்தால் ஓரிரு நாட்களில் சமையல் எரிவாயு சிலிண்டெருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல்உருவாகியுள்ளது.