ஆடிட்டர்: ஜெயேந்திரரிடம் குற்றப் பத்திரிக்கை
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்டோருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்றுகுற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
இவர்களில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். 3 பேர் சிறையில் உள்ளனர். ரவிசுப்ரமணியம்அப்ரூவர் ஆகியுள்ளார்.
இந்த வழக்கில் ஏற்கனவே 600 பக்க குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அதில் 81 பேர் சாட்சிகளாகசேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 6ம் தேதி குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வழங்கப்படவில்லை.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து ஜெயேந்திரர் உள்பட ஜாமீனில் விடுதலையாகியுள்ள 9பேரும், சிறையில் உள்ள 3 பேரும், அப்ரூவர் ரவி சுப்ரமணியமும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அவர்களிடம் நீதிபதி உமா மகேஸ்வரி குற்றப் பத்திரிக்கை நகல்களை வழங்கினார். அதன் பின்னர் வழக்கு விசாரணையைஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.