For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவகங்கை அருகே பலத்த சூறாவளி: 50 வீடுகள் சேதம்

By Staff
Google Oneindia Tamil News

சிவகங்கை:

சிவகங்கை அருகே பொன்னாம்பட்டி என்ற கிராமத்தில் திடீரென வீசிய பலத்த சூறாவளிக்கு 50க்கும் மேற்பட்ட வீடுகள்சேதமடைந்தன.

சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந் நிலையில், நேற்று இரவு வீசிய பலத்த சூறாவளிக் காற்றால் சூரக்குளம் புதுக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்டபொன்னாம்பட்டி என்ற கிராமத்தில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

50க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகள் பறந்து போயின. இந்த சூறாவளியால் கண்மாயில் இருந்த தண்ணீர் பல அடி உயரத்துக்குவாரி இறைக்கப்பட்டது.

சில நிமிடங்களே இந்த சூறாவளி வீசினாலும், அந்த கிராமம் பலத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த சூறாவளித்தாக்குதலால் 12 பேர் காயமடைந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X