பொறாமையில் பொசுங்கும் கருணாநிதி: ஜெ. தாக்கு

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்:

தமிழக மக்களுக்கு நான் அறிவித்து வரும் சலுகைகளைக் கண்டு பொறுக்க முடியாமல் பொறாமையால் பொசுங்கிக்கொண்டிருக்கிறார் கருணாநிதி என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து மாவட்டந்தோறும் நலத் திட்டப் பணிகளைத் துவக்கி வைத்து வருகிறார் ஜெயலலிதா.அந்த வகையில் இன்று காலை சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவள்ளூர் சென்றார் ஜெயலலிதா.

அவரது வருகையை ஒட்டி திருவள்ளூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஊரெல்லாம் அம்மா.. தாயே போஸ்டர்கள்,வரவேற்பு வளைவுகள், அதிமுக கொடிகள், தோரணங்கள், டிஜிட்டல் பேனர்கள், போலீஸ் தலைகள், கதர் வேட்டிகள் எனகலகலத்தது திருவள்ளூர்.

பகல் 11.30 மணியளவில் திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் வளர்ச்சித்திட்டங்களுக்கான விழா நடைபெற்றது. ரூ. 377.87 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்து ஜெயலலிதாபேசியதாவது:

நான் மக்கள் நலன் கருதி பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகிறேன், செயல்படுத்தி வருகிறேன்.

ஆனால் இதைப் பொறுக்க முடியாத கருணாநதி போன்ற சிலர் பொறாமையில் பொசுங்கிப் போய்க கொண்டிருக்கின்றனர். நான்அறிவிக்கும் திட்டங்களை, சலுகைகளை விமர்சித்து அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றனர். தேர்தலை மனதில் கொண்டேஇவற்றை நான் அறிவிப்பதாக விமர்சிக்கின்றனர்.

மக்கள் நலன் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் எப்போதும் தேர்தலை நினைத்தே, பதவியை நினைத்தே செயல்பட்டுக்கொண்டிருக்கும், கோட்டையைப் பிடிப்பது எப்படி என்று கனவு கண்டு கொண்டிருக்கும் இவர்களுக்கு நான் அறிவிக்கும்சலுகைகள், திட்டங்கள் எட்டிக் காயாகத்தான் இருக்கும்.

திமுக ஆட்சியின்போது சுரண்டப்பட்டு படு மோசமான நிலையில் இருந்த தமிழகத்தின் நிதி நர்வாகம் எனது அரசு பதவிக்குவந்த பிறகு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இன்று சீராக, உறுதியாக உள்ளது. இதன் காரணமாகவே இத்தனைசலுகைகளையும், திட்டங்களையும் அறிவிக்க முடிகிறது.

மக்கள் நலன் கருதியே நான் பல்வேறு சலுகைகள், திட்டங்களை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்தேன். இப்போது மக்கள் நலன்கருதியே அவற்றை மீண்டும் வழங்கி வருகிறேன்.

நான் மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளேன். எனவே கருணாநிதி போன்றவர்கள் என்னதான் முயற்சி எடுத்தாலும்,பொறாமையில் பொசுங்கினாலும் எங்களது கூட்டணியை உடைக்க முடியாது என்றார் ஜெயலலிதா.

நிகழ்ச்சியில் 24,317 பேருக்கு ரூ. 10.03 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் ஜெயலலிதா வழங்கினார்.

ஜெயலலிதா வருகையையொட்டி வடக்கு மண்டல ஐ.ஜி. ஜாங்கிட் தலைமையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+