ஜெயலட்சுமிக்கு போலீஸ் பாதுகாப்பு தொடருமா?
மதுரை:
போலீஸ் பாதுகாப்பை நீட்டிக்கக் கோரி ஜெயலட்சுமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 3ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலட்சுமி தொடர்பான வழக்குகளில் அவர் மீதே குற்றம் சுமத்தப்பட்டு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால்அவருக்கு கொடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பை வாபஸ் பெற காவல்துறை முடிவு செய்தது.
இதையடுத்து, தனது உயிருக்கு தொடர்ந்து ஆபத்து இருந்து வருவதாகவும் எனவே போலீஸ் பாதுகாப்பை தொடர வேண்டும்என்றும் கோரி மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம்,கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றியது.
இந்த வழக்கு நீதிபதி அகமதுல்லா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலட்சுமி சார்பில் ஆஜரானவழக்கறிஞர்கள், ஜெயலட்சுமியின் உயிருக்கு இன்னும் ஆபத்து இருப்பதால் போலீஸ் பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும்என்றனர்.
இதற்கு ஆட்சேபனை மனு செய்ய வேண்டியுள்ளது. அதற்கு கால அவகாசம் தேவை என்று அரசுத் தரப்பில் ஆஜரானவழக்கறிஞர் கூறினார். இதை ஏற்ற நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications