நாகூர் தர்ஹா கந்தூரி விழா: ஏ.ஆர்.ரஹ்மான் பிரார்த்தனை
நாகூர்:
நாகப்பட்டனம் மாவட்டம் நாகூர் தர்ஹாவில் நடந்த சந்தனக் கூடு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு வழிபட்டார்.
நாகூர் தர்ஹாவில் 448வது கந்தூரி விழா கடந்த 8ம் தேதி முதல் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அவுலியாரெளலா ஷெரீபுக்கு சந்தனம் பூசும் வைபவம் நேற்று நடந்தது.
இதற்காக பல்வேறு அலங்கார ஊர்திகளில் சந்தனக் கூடுகள் எடுத்து வரப்பட்டன. அனைத்தும் அதிகாலை 4.15 மணிக்குதர்ஹாவை வந்தடைந்தன. பின்னர் சந்தனக் குடங்கள் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டன.
இந் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு சந்தனம் பூசினார். பின்னர் தனது கோரிக்கைகள்சிலவற்றுக்காக சிறப்பு துஆ (பிரார்த்தனை) செய்யுமாறு அவர் தலைமை டிரஸ்ட்டியான முகம்மது கலிபா சாஹிப்பிடம்கோரிக்கை வைத்தார். இதை ஏற்று ரஹ்மானுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்த ஆண்டு நாகூர் கந்தூரி விழாவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 4 லட்சம் பேர் வரை வந்துள்ளதாகக்கூறப்படுகிறது. இன்றுடன் நாகூர் கந்தூ விழா முடிவடைகிறது. 27ம் தேதி கொடி இறக்கப்படும்.












Click it and Unblock the Notifications