தலையில் உடைப்பு! கொட்டியது ரத்தம், குங்குமமே மருந்து!
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் மாலையகவுண்டன்பட்டி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் 200 பேர், தலையில் தேங்காய்உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
11 பேர் தப்பு அடித்தவாறு கோவிலைச் சுற்றி ஊர்வலமாக சென்றனர். பின்னர் நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக 200 பக்தர்கள்கோவிலுக்கு முன்பு வரிசையாக அமர்ந்தனர். அவர்களது தலையில் கோவில் பூசாரி தேங்காயை உடைத்தவாறு சென்றார்.
திகிலூட்டும் வகையில் நடந்த இந்த தேங்காய் உடைப்பின்போது பல பக்தர்களுக்கு தலையில் குபுக்கென்று ரத்தம்கொப்பளித்தது. அவர்கள் தலை மீது குங்குமத்தையும், திருநீரையும் தூவிய பூசாரி சரியாகி விடும் என்று கூறி அனுப்பினார்.
சிலர் மொட்டைத் தலையுடன் தேங்காய் உடைத்துக் கொண்டனர். 12 ஆண்டுகளுக்குப்பிறகு தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சிநடந்தததால் பக்தர்கள் பெரும் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர்.
இந்த விழாவில் சுற்றுப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தலையில் தேங்காய்உடைக்கப்படுவதையொட்டி அம்மையநாயக்கன்பட்டி போலீஸார் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications