காவிரி நீர்: முடியாது.. முடியாது..- கர்நாடகம் திட்டவட்டம்
பெங்களூர்:
மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என கர்நாடகம் மீண்டும்மறுப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே அம் மாநில சட்டசபையில் பேசுகையில்,
கிருஷ்ணராஜ சாகர் அணையில் இப்போது 98.56 அடி நீர் தான் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 104 அடி தண்ணீர்இருந்தது. குறைவான நீர் இருப்பே உள்ளதால் அணையை திறக்க முடியாது. இதனால் அங்கிருந்து நீரைத் திறந்துவிடும்கேள்விக்கே இடமில்லை என்றார்.
அதே போல காவிரி தொடர்பாக வாட்டாள் நாகராஜ், பாஜக எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கார்கே,
இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி நதி நீர் ஆணையத்தை மத்திய அரசு கூட்டவேண்டிய அவசியமே இல்லை. கர்நாடக விவசாயிகளின் நலனை பாதிக்கும் வகையில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது.
தமிழகத்தில் ஆட்சியில் திமுக இருந்தாலும் சரி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாலும் சரி நெருக்குதல் தரும் வேலைளில்ஈடுபடுகின்றனர் என்றார்.
பாஜக மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான எதியூரப்பா பேசுகையில், தமிழகத்துக்கு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்துநீரைத் திறந்துவிட கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications