ஆடைகளை களைந்து சோதனை: அவமானத்தில் மாணவி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

ஆசிரியையின் பணம் திருட்டுப் போனதையடுத்து, வகுப்பில் ஆடைகளைக் களைந்து சோதனை நடத்தியதால்அவமானமடைந்த 15 வயது மாணவி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சரண்யா. 15வயதாகும் சரண்யா அரசு உயர் நிலைப் பள்ளியில் 9வது வகுப்பு படித்து வந்தார்.

இவரது வகுப்பு ஆசிரியை அஞ்சலிதேவி, தான் வைத்திருந்த ரூ. 1,200 பணத்தைக் காணவில்லை என்று தலைமைஆசிரியரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து அஞ்சலி தேவியின் வகுப்பு மாணவிகளிடம் அவரும், மேலும் இரண்டுஆசிரியர்களும் சேர்ந்து விசாரணை நடத்தினர்.

அப்போது சரண்யா மீது சந்தேகப்பட்ட ஆசிரியை அஞ்சலி தேவி, அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரதுஆடைகளைக் களையச் சொல்லி சோதனை போட்டுள்ளார். ஆனால் அவரிடம் பணம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்த சோதனையால் சரண்யா அவமானமடைந்தார்.

பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த சரண்யா, மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார். பலத்த தீக்காயத்துடன் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் புதுவை ஜிப்மர் மருத்துவனைக்குக் காண்டு போகப்பட்டார். அங்குசிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

சரண்யா இறப்பதற்கு முன்பு அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆசிரியை அஞ்சலி தேவி மற்றும் இருஆசிரியர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த 3 ஆசிரியர்களும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைபோலீஸார் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+