For Daily Alerts
Just In
எம்பிபிஎஸ்: தியாகிகளின் பேரன்களுக்கு சீட் கோரி வழக்கு
சென்னை:
மருத்துவக் கல்லூரிகளில் தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு சீட் கொடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
அதில், மருத்துவக் கல்லூரிகளில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.தியாகிகளின் நேரடி வாரிசுகளுக்கு தற்போது அதிக வயதாகி விட்டிருக்கும் என்பதால் அவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில்சீட் கொடுப்பது உகந்ததாக இருக்காது.
அதற்குப் பதில் அந்த 3 சீட்டுகளையும் தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன், இதற்கு பதில் அளிக்குமாறு சுகாதாரத் துறை மற்றும் மருத்துவக் கல்விஇயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Story first published: Wednesday, July 20, 2005, 5:30 [IST]