For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் வழிப் பள்ளி இடிப்பு; பொதுமக்கள் கொந்தளிப்பு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை வேளச்சேரி அருகே தமிழ் வழிப் பள்ளியை புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கியதால்பொதுமக்கள் கொந்தளித்தனர். புல்டோசரை சிறை பிடித்து சாலை மறியலிலும் அவர்கள் இறங்கினர்.

வேளச்சேரி அருகே உள்ளது பள்ளிக்கரணை. இங்கு ஊராட்சிக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 6ஆண்டுகளாக பாவாணர் தமிழ் வழிப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் படித்து வருகிறார்கள்.

பெரிய பள்ளிகளுக்குச் சென்று அதிக செலவு செய்து படிக்க முடியாத ஏழை மாணவ, மாணவியர் தங்களது தாய்மொழியில் இந்தப் பள்ளியில் தரமான கல்வியைக் கற்று வந்தனர்.

இந் நிலையில் இந்த இடத்தை ராமசாமி என்பவர் குத்தகைக்கு எடுத்தார். இதைத் தொடர்ந்து பள்ளியைக் காலிசெய்யுமாறு நிர்வாகத்திற்கு அவர் உத்தரவிட்டார்.

ஆனால், திடீரென சொன்னால் காலி செய்ய முடியாது. கால அவகாசம் தேவை என்று பள்ளி நிர்வாகம்அவரிடம் கோரியது.

அதை ஏற்க மறுத்த ராமசாமி, திடீரென போலீஸார் மற்றும் புல்டோசருடன் பாவாணர் பள்ளிக்கு வந்தார்.அவர்கள் பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

பள்ளிக்குள் இருந்த சான்றிதழ்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தூக்கி அருகே இருந்த கிணற்றில் வீசினர்.

தகவல் அறிந்ததும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து சாலை மறியலில் இறங்கினர்.புல்டோசரைசிறை பிடித்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியறிவு புகட்டி வந்தபள்ளியை இப்படி அநியாயமாக இடித்துத் தள்ளியதற்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

போலீஸாருக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பள்ளிக்கரணை போலீஸார் பொது மக்களை சமாதானப்படுத்தி, நீதிமன்ற உத்தரவு காரணமாகவே பள்ளிஇடிக்கப்பட்டதாக கூறி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

பள்ளிக்கூடம் இடிக்கப்பட்டதால் அதில் வேலை பார்த்து வந்த ஆசிரியர்கள், படித்து வந்த மாணவ, மாணவியர்சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X