சேரன் எக்ஸ்பிரசில் தீக்குளித்தவர் யார்?
Subscribe to Oneindia Tamil
கோவை:
சென்னையிலிருந்து கோவை சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் தற்கொலை செய்து கொண்ட நபரைத் தவிர வேறு யாரும்பாதிக்கப்படவில்லை. யாரும் காயம் அடையவும் இல்லை.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட நபர் யார்,எதற்காக அவ்வாறு செய்தார், அவர் தீவிரவாத இயக்கத்த்ை சேர்ந்தவரா என்பது குறித்து போலீஸார் தீவிரமாகவிசாரித்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட நபர் திருப்பூரில் ஏறியதாக தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து திருப்பூர், ஈரோடு ஆகியபகுதிகளில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காணாமல் போன நபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications