For Daily Alerts
Just In
டெல்லி-கனடா ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது தீ விபத்து
அம்ரிஸ்தர்:
டெல்லியில் இருந்து கனடா சென்ற ஏர் இந்தியா விமானம் அம்ரிஸ்தர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அதன் ஒருசக்கரத்தில் தீப் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து 250 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அப்போது அதன் ஒரு சக்கரத்தில் தீப் பிடித்துக் கொண்டது. விமான நிலைய தீயணைப்புப் படையினர் மிக வேகமாகசெயல்பட்டு தீயை அணைத்துவிட்டனர்.
இதனால் விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. அதிலிருந்த 250 பயணிகளும் அம்ரிஸ்தரிலேயேதரையிறக்கப்பட்டனர். பின்னர் வேறு ஒரு விமானம் மூலம் அவர்களை கனடா அழைத்துச் செல்ல நடவடிக்கைஎடுக்கப்பட்டது.
தீப்பிடித்த அந்த விமானம் பழுது பார்ப்பதற்காக மும்பை செல்லப்பட்டது.
Story first published: Thursday, July 21, 2005, 5:30 [IST]