For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விநாயகமூர்த்திக்கு வேட்டு வருமா?: டெல்லியில் வாசன் முகாம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசிய அடி வாங்கி, சர்ச்சையில் சிக்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. விநாயகமூர்த்தி மற்றும்கோவை எம்.எல்.ஏ. மகேஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக டெல்லியில மேலிடத் தலைவர்களுடன்தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் நடந்த அரசு மருத்துவமனை கட்டட திறப்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசியதால்காங்கிரஸ் கட்சியினரின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார் மூத்த எம்எல்ஏவான விநாயகமூர்த்தி.

வாசனுக்கு ஆதரவு தொண்டர்களால் அவர் சத்தியமூர்த்தி பவனில் வைத்துத் தாக்கப்பட்டார். அத்தோடு அவரது வீடும், காரும்சோடா பாட்டில் வீசித் தாக்கப்பட்டது.

இதேபோல, கோவையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசினார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.மகேஸ்வரி. இவர் இளங்கோவனின் ஆதரவாளர். இதுவும் காங்கிரஸ் கட்சியினரிடையேகடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.

இந் நிலையில் வாசன் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மேலிட அழைப்பின் பேரில் அவர் டெல்லி சென்றுள்ளதாகத்தெரிகிறது. விநாயகமூர்த்தி விவகாரம் குறித்து வாசனுடன் மேலிடத் தலைவர்கள் பேசவுள்ளதாக கூறப்படுகிறது.

தன் மீதான தாக்குதலைக் கண்டித்து சத்தியமூர்த்தி பவனில் விநாயகமூர்த்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.அப்போது தமிழகத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் வாசன் குறித்து சரமாரியாகப் புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்போது கிருஷ்ணமூர்த்தி உறுதியளித்தார். இதையடுத்து தனது போராட்டத்தைக்கைவிட்டார் விநாயகமூர்த்தி.

இந் நிலையில் வாசனை கட்சி மேலிடம் டெல்லிக்கு அழைத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X