ஓட்டுப் போட அனுமதி கோரும் போலீஸ்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினரும் ஓட்டுப் போட அனுமதிக்க வேண்டும் என்று கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் காவலர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல்களின்போது பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பாதுகாப்பு பணி தொடர்பாக பல்வேறுஊர்களுக்கு நாங்கள் அனுப்பப்படுகிறோம்.
எங்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. எனவே நாங்களும் தேர்தல்களில் நேரடியாகவோ அல்லதுதபால் மூலமாகவோ வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.
இந்த மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications