பெங்களூர் போலீஸிடமிருந்து தப்பிய வாலிபர் சேலத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்:
பெங்களூர் போலீஸாரிடமிருந்து தப்பி ஓடிய வாலிபர் சேலத்தில் கைது செய்யப்பட்டார்.
அப்போது மார்டின் யாருக்கும் தெரியாமல் போலீஸ் நிலையத்திலிருந்து தப்பினான். ஒரு காரை வழிமறித்து அதன் டிரைவரைமிரட்டி வெளியே தள்ளிவிட்டு காருடன் மார்டின் தப்பிச் சென்றான்.
உடனடியாக போலீஸார் அவரை விரட்டிச் சென்றனர். அவர் சேலத்திற்கு தப்பிச் செல்வதை அறிந்த பெங்களூர் போலீஸார்,சேலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சேலம் எஸ்.பி. ஆறுமுகம் உத்தரவின் பேரில் உடனடியாக சேலம் மாவட்டம்முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.
சேலம் போலீஸாரின் துரித நடவடிக்கையில் தீவட்டிப்பட்டி என்ற இடத்தில் காருடன் வந்த மார்டின் சுற்றி வளைக்கப்பட்டான்.பிறகு அவன் பெங்களூர் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டான்.












Click it and Unblock the Notifications