சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க கோருகிறார் இளவரசி
சென்னை:
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரானஇளவரசி பெங்களூர் தனி நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந் நிலையில் இளவரசி தனது வழக்கறிஞர் கோபி மூலமாக இன்று நீதிபதி பச்சாப்பூரே முன்பு ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை. நான் நிரபராதி, குற்றமற்றவள். எனவே இவ் வழக்கிலிருந்துஎன்னை விடுவிக்க வேண்டும் என்று இளவரசி கோரியிருந்தார்.
இந்த மனுவுக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரணையும் முடிவடைந்து விட்டது.
இந்த நிலையில் இப்படி ஒரு மனுவைத் தாக்கல் செய்வது தவறானது. இந்த மனுவை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்றார்.
பின்னர் இந்த மனு மீது நாளை விவாதம் நடைபெறும் என நீதிபதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இரு வழக்குகளும்ஒன்றாக சேர்க்கப்பட்டு விட்டதால் திருத்தப்பட்ட குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வது என்னவாயிற்று என்று அரசுவழக்கறிஞரிடம் நீதிபதி கேட்டார்.
அதற்கு ஆச்சார்யா, குற்றப் பத்திரிக்கையை திருத்த முடியாது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தினகரன் மீது கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். இதையடுத்து விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி பச்சாப்பூரே.












Click it and Unblock the Notifications