சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க கோருகிறார் இளவரசி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரானஇளவரசி பெங்களூர் தனி நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, டி.டி.வி.தினகரன், சுதாகரன் உள்ளிடோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர்தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் சொத்துக் குவிப்பு வழக்கும், லண்டனில் முறைகேடாக ஹோட்டல்வாங்கப்பட்ட வழக்கும் ஒன்றாக இணைக்கப்பட்டது.

இந் நிலையில் இளவரசி தனது வழக்கறிஞர் கோபி மூலமாக இன்று நீதிபதி பச்சாப்பூரே முன்பு ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை. நான் நிரபராதி, குற்றமற்றவள். எனவே இவ் வழக்கிலிருந்துஎன்னை விடுவிக்க வேண்டும் என்று இளவரசி கோரியிருந்தார்.

இந்த மனுவுக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரணையும் முடிவடைந்து விட்டது.

இந்த நிலையில் இப்படி ஒரு மனுவைத் தாக்கல் செய்வது தவறானது. இந்த மனுவை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்றார்.

பின்னர் இந்த மனு மீது நாளை விவாதம் நடைபெறும் என நீதிபதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இரு வழக்குகளும்ஒன்றாக சேர்க்கப்பட்டு விட்டதால் திருத்தப்பட்ட குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வது என்னவாயிற்று என்று அரசுவழக்கறிஞரிடம் நீதிபதி கேட்டார்.

அதற்கு ஆச்சார்யா, குற்றப் பத்திரிக்கையை திருத்த முடியாது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தினகரன் மீது கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். இதையடுத்து விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி பச்சாப்பூரே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+