2 வழக்குகளில் ஆதிகேசவன் மீது குற்ற பத்திரிக்கை
சென்னை:
மோசடி மன்னன் ஆதிகேசவன் மீது 2 வழக்குகளில் 50 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆதிகேசவன் மீது இதுவரை 38 பேர் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் ஆதி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதுதவிர குண்டர் சட்டத்தின் கீழும் ஆதி கைதாகியுள்ளார்.
இந் நிலையில் 2 வழக்குகளில் ஆதி கேசவன் மீது சென்னை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த சூரியபிரகாஷ் என்ற தொழிலதிபரிடம் ரூ. 1 லட்சம் மோசடி செய்தது, கஜேந்திரன் என்பவரிடம் ரூ.40,000 மோசடி செய்தது ஆகிய இரு வழக்குகளில் ஆதி மீது சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில்போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
ஆதிகேசவன் மீது பதிவாகியுள்ள 38 வழக்குகளிலும் தனித் தனியாக குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications